தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால், முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள்.
அதன்படி, வரும் அக். 16 (வியாழன்) அன்று செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெறுகிறது.
குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
No comments:
Post a Comment