ஆண் நண்பர்களை மயக்கி உல்லாசம்..... தொழிலதிபரிடம் நகை திருடிய தோழி..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 6, 2025

ஆண் நண்பர்களை மயக்கி உல்லாசம்..... தொழிலதிபரிடம் நகை திருடிய தோழி.....

 


சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 47). பிரபல தொழிலதிபரான இவர் சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருடன் தோழி தீபிகாவும் (24) தங்கியிருந்தார். அப்போது இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது. போதை மயக்கத்தில் மணி தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.


தோழி தீபிகாவை காணவில்லை. மணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியும் திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக மணி தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சபரிதாசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.


விசாரணையில் மணியுடன் ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவரது தோழி தீபிகாதான் நகையை திருடி சென்றது தெரியவந்தது.தீபிகாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தீபிகாவை குன்றத்தூரில் வைத்து நேற்று அதிரடியாக கைது செய்தனர். மணியிடம் திருடிய 10 பவுன் தங்கச்சங்கிலியை தீபிகா விற்றுவிட்டதாக தெரிகிறது. விற்கப்பட்ட தங்கச்சங்கிலியை வாங்கியவர் அதை உருக்கி தங்ககட்டியாக மாற்றி உள்ளார். அதை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தீபிகா திருமணம் ஆகாதவர். அவரது தந்தை சென்னை பெருநகர மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்க்கிறார். பெற்றோரை பிரிந்து தீபிகா தனியாக குன்றத்தூரில் வாழ்ந்து வந்துள்ளார். தீபிகாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் தொழிலதிபர் மணியும் ஒருவர் என்று தெரிகிறது.


ஆண் நண்பர்களை மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு இதுபோல் பணம், நகையை பறிப்பதை தீபிகா வழக்கமாக செய்து வந்ததாகவும், அதுபற்றி அவரிடம் விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். தங்கக்கட்டி மீட்கப்பட்டு விசாரணை முடிந்தவுடன் தீபிகா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment