வேதாரண்யம், கோடியக்கரையில் வன்கொடுமை தாக்குதல்..... நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்......
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை, அண்ணாநகரில் கந்தசாமி வயது 25 என்ற மாற்றுத்திரனாளி வசித்துவருகிறார். இவருக்கு மாற்றுத்திரனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த மாண்புமிகு முதலமைச்சர் படம் மழையால் கிழிந்துவிட்ட நிலையில், ஏன் முதலமைச்சர் படம் ஒட்டவில்லை என்று கேட்டு முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கே.பி.லட்சுமனன் நேற்று ( 26.08.25 ) கடுமையாக தாக்கியுள்ளார். இதனை கந்தசாமியின் தந்தை மணியன் குடும்பத்தினர் கோடியக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியனியத்திடம் சென்று முறையிட்டனர்.
இந்த நிலையில் பட்டியலினத்தைச் சார்ந்த இவர்கள் எங்களை கேள்வி கேட்பதா என்ற கோபத்தோடு, நேற்று ( 26.08.25 ) இரவு பத்து மணியளவில் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் இராஜேஸ்வரி இராஜேந்திரன் வீட்டில் புகுந்த பத்திற்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலுக்கான ஏற்பாடாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியன் செய்ததாக கூறுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான கந்தசாமி, ராஜேந்திரன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை இன்று ( 27.08.25 ) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஏ.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ்சந்திரபோஸ், கே.சித்தார்த்தன், வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜமாணிக்கம், விவசாயிகள் சங்க ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வி.மீனாட்சிசுந்தரம், ஜனநாயக மாதர் சங்க வேதாரண்யம் ஒன்றியச் செயலாளர் எம்.சுமதி ஆகியோர் சென்று பார்த்தனர்.
பின்னர் வேதாரண்யம் காவல்நிலையம் சென்று விசாரணை செய்ததற்கு, சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவுஸசெய்யாததது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட காவல்நிலைய பொறுப்பு அலுவலரிடம், கோடியக்கரை தலித் மக்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயக்கம் நடத்தப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன் தெரிவித்தார்.
No comments