• Breaking News

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஓப சமுத்திரம் கிராமத்தில் பழமைவாய்ந்த எல்லமாத்தம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா..... திரளான பக்தர்கள் பங்கேற்பு

     


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓப சமுத்திரம் கிராமத்தில்.சாலையன் கண்டிகையில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு  எல்லமாத்தம்மன்.ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் 20.ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி,   கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 

    பின்னர் மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என கோஷமிட்டு அம்மனை வணங்கினர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது  தொடர்ந்து இரவு சாமி திருவீதி உலா நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவில் நிர்வாகம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    No comments