ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் தடை உத்தரவு அமல்..... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (9-ந்தேதி) காலை முதல் 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும்.

மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் இன்று (9-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments