தென்காசி: கல்லூரணி ஊராட்சி செட்டியூரில் சர்ச் கட்ட அனுமதிக்ககூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


கல்லூரணி ஊராட்சி செட்டியூரில் சர்ச் கட்ட அனுமதிக்ககூடாது என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள செட்டியூரை சேர்ந்த  ஊர் நிர்வாகி நடராஜன் தலைமையில் ஊர் பொதுமக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சியை சேர்ந்த செட்டியூர் கிராமத்தில் சுமார் 600 இந்து குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் கிடையாது. தற்போது இங்கு சமுதாய நலக்கூடம் என்ற பெயரில் சர்ச் கட்டுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.முழுக்க, முழுக்க இந்து மக்கள் மட்டுமே வசித்து வரும் இப்பகுதியில் சர்ச் கட்டினால் சட்ட ஒழுங்கு கெடும் சூழ்நிலை உருவாகும். எனவே சர்ச் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments