ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் , சங்கராபாளையம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1கோடியே 62 லட்சத்து 64ஆயிரம் மதிப்பீட்டில் சங்கராபாளையம் ஊராட்சி சுமைதாங்கி முதல் குருநாதபுரம் குருநாத சுவாமி கோவில் வனம் வழியாக மைக்கேல் பாளையம் ஊராட்சி தபேதரன்காடு வரை தார்சாலை அமைக்க அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் , ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் நாகராஜ் , இளைஞர் அணி அமைப்பாளர் கவின் பிரசாத் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் , குருசாமி , கிளை செயலாளர் கந்தசாமி , மாதேஷ் பாபுதுரை மற்றும் திமுக நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments