சேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில், கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் கிரான்காடு திமுகவின் கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார்.இவருக்கும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்ட காலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் தனது வீட்டு அருகே படுத்திருந்தபோது, உறவினர்கள் இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், ராஜேந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகச் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நிலத்தகராறில் ஆளும் கட்சியின் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

0 Comments