திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்


தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்  உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு‌.வி.பிரசண்ணகுமார்., இ.கா.ப, தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார்., இ.கா.ப., 16 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments