சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

 


சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய், தவெக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் வருவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. இதனால் அனைவரும் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெயிலிலேயே நின்றிருந்தனர்.

இந்த நிலையில் 3 மணி நேரம் வெயிலில் நின்றதால் சுராஜ் என்ற வெள்ளிப் பட்டறைத் தொழிலாளி அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சுராஜ் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ்.

Post a Comment

0 Comments