இராமநாதபுரம்: நோன்புப் பெருநாளை முன்னிட்டு 20 லட்சம் மதிப்பில் உதவிகள் தமுமுக வழங்கியது

 


இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக சார்பாக வருடம் தோறும் நோன்பு பெருநாள் உதவிகள் எளியோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

அதனைத் தொடர்ந்து இந்த வருடம்தமுமுக    8-3-2026 மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மாநில பொதுசெயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி கலந்து கொண்டு ரூபாய் 20 லட்சம்  மதிப்பிலான  நோன்பு பெருநாள் உதவிகள் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்யும் அடிப்படையில் சிறு தொழில் உதவியாக 110 பேருக்கு ரூபாய் 13 லட்சம் ஆயிரம்பேருக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பில் புத்தாடைகளும் மூன்று லட்சம் மதிப்பில் உணவுப் பொருட்களும்   மக்களுக்குவழங்கினர்.

இந்நிகழ்வில் தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.  சலிமுல்லாஹ்கான் மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் காதர் பிச்சை MCவர்த்தக அணி துணை செயலாளர் பரகத்துல்லா மற்றும் நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments