கீழக்கரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபெற்றது



சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் , வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.  இதில் வட்டாட்சியர்  இராமசுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர்  கோகிலா, நகராட்சி ஆணையாளர்  கிருஷ்ணவேணி, சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா,உதவி திட்ட அலுவலர்கள் சத்ய  சொரூபன், ஜெகன் விஜய்,  சமுதாய அமைப்பாளர் சரளா தேவி, கீழக்கரை வருவாய் ஆய்வாளர்,  காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த மகளிரும் இதில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments