காவல்துறை அதிகாரிகள் ஊழல், முறைகேடு செய்தால் புகார் அளிக்க மாவட்டம் வாரியாக வாட்சப் எண் அறிவிப்பு

 


தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.

* காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம்.

* பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

* புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

* புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

* எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என DGP/HoPF கேட்டுக்கொண்டுள்ளார்.



Post a Comment

0 Comments