விருதுநகர் கலெக்டர் அலுவலகம் ஏலம்... நீதிமன்ற ஊழியர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு... - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 21, 2023

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் ஏலம்... நீதிமன்ற ஊழியர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...


மதுரை அருகே அரசரடி பகுதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமங்கலம் முதல் சாத்தூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை டெண்டர் மூலம் ஒப்பந்தம் செய்து பணிகள் மேற்கொண்டு வந்து உள்ளார். 

இந்த நிலையில் சபரிமுத்து 30%  சாலை பணிகளை முடித்த நிலையில்  ஒப்பந்தத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வேறு ஒருவருக்கு  பணிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த டெண்டர் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சபரிமுத்து நெடுஞ்சாலைத்துறை மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த  2007 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒப்பந்தக்காரர் சபரிமுத்துக்கு 68 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ஆனால் சபரிமுத்துக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத காரணத்தால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். இந்த நிலையில் கடந்த  18/08/2022 அன்று  சபரிமுத்துக்கு 2 கோடியே 35 லட்சத்தி 2 ஆயிரத்தி 208 ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

ஆனால் நீதிமன்ற உத்தரவு படி ஒப்பந்ததாரர் சபரிமுத்துக்கு தற்போது வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத காரணத்தால் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனை  சுற்றியுள்ள இடங்களை வரும் 31ம் தேதி ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்றம் ஊழியர்கள் ஒட்டினார்கள்.

 இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment