சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தி விலைவாசியை ஏற்றி மக்களை தொடர் இன்னலுக்கு உள்ளாக்கி வருவது தான் மத்திய அரசின் தொடர் சாதனை- விளாத்திகுளத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மஹாலில் வைத்து கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே என் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் ஏழை எளிய மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை சுங்க சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி விலைவாசியை ஏற்றி வருவது தான் மத்திய அரசின் தொடர் சாதனை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை 85 சதவீதம் வாக்குறுதிகளை தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
ஜாதி மத வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்கியவர் தலைவர் கலைஞர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
No comments