மில்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , உக்கரம் ஊராட்சி மில்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 473 எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த கே. புவனேஷ் , இரண்டாம் இடம் பிடித்த 500 க்கு 438 செல்வி ஆர். காவ்யா , மூன்றாம் இடம் பிடித்த . 500 க்கு 396செல்வி. எஸ். ராகவர்த்தினி ஆகியோரை உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் எம். முருகேசன் சால்வை அணிவித்து வாழ்த்தி ஊக்கத்தொகை வழங்கினார் .
மேற்படி நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரசேகர் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராம் கருணாநிதி , சூ.ரா மாரிமுத்து உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள். பள்ளியில் முதலிடம் படித்த கே. புவனேஷ்ஷின் தாயார் வசந்தா உக்கரம் ஊராட்சி தூய்மை காவலர் ஆவார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments