தருமை ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மயிலாடுதுறையில் சைவத்தையும் தமிழையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இவ்வாதீனத்தால் 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு 1988 ஆம் ஆண்டு கலைக்கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. இக்கல்லூரியின் 75ம் ஆண்டு பவள விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பவளவிழா நிறைவு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக தருமபுரம் ஆதீனம் சார்பில் முதலமைச்சருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தருமையாதீன வானொளி, தொலைக்காட்சி ஒளி ஓலி பதிவகத்தை திறந்து வைத்தும், பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டார்.
பின்னர் பேசிய தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியபோது :-
75வது பவள விழா தமிழக முதல்வர் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த கலையரங்கம் தயார் செய்யப்பட்டதாகவும் , அவருடைய ராசியும் நம் ராசியும் ஒவ்வொரு 25 ஆண்டுக்கும் கழக ஆட்சி அமைந்துள்ளது. நூறாவது ஆண்டு விழாவிலும் கழக ஆட்சி அமையும்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 80க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் , தமிழக முதல்வர் அவர்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் 2 லட்சம் கொடுத்து திருப்பணிகளை தொடங்கி வைத்ததாக கூறினார்.
நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை அவர்கள் செயல்படுத்துகிறார்கள் . இதை எப்படி ஆன்மீக ஆட்சி இல்லை என சொல்ல முடியும்.
நாங்கள் கல்வி நிலையங்களில் காலை உணவு போட வேண்டும் என்று முதலாவதாக இங்கு தொடங்கினோம். ஆனால் தமிழக அரசு அதனை அறிவித்து விட்டதாகவும் கூறினார். அரசு நினைத்தால் எவ்வளவு செய்யலாம் என தெரிவித்தார்.
அரசு 48 மணி நேரம் தான் கொடுக்கப்பட்டதாகவும் , விழாவை நடத்த முடியுமா என அரசு இங்கு வந்து நம்மை சோதித்து பார்த்ததாகவும் கூறினார் . அனைவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக இந்த விழா தயார் செய்யப்பட்டு நடைபெற்று இருப்பதாக தெரிவித்தார்.
4 தலைமுறை முதல்வர் குடும்பம் தருமை ஆதீனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை :-
16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட தருமை ஆதீன மடம் . அன்று முதல் இன்று வரை ஆன்மீக சேவை , சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளது.பவள விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த மாதம் தருமபுரம் ஆதீனம் கல்லூரியின் பவள விழா கொண்டாடப்படுகிறது அடுத்த செப்டம்பர் மாதம் திராவிட மாடல் பவள விழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பு இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தருமை ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்பத் நட்பும் உண்டு.
நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் மாற்றும் பணிகளை பார்த்து வியந்து கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல திருக்கோவிலின் விடியலுக்கு சாட்சியாக உள்ளது என பல்வேறு மடாதிபதிகள் வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசாக தமிழக அரசு உள்ளது.
நாளை காலை உணவு திட்டம் தமிழக முழுவதும் விரிவாக்கப்பட உள்ளது.அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என நினைக்கும் கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை . தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் பல்வேறு ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது போதுமானது.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும்போது எல்லாம் ஆன்மீகப் பெரியோர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் , இன்றைய ஆன்மிக ஆளுமைகளும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உங்களது கோரிக்கைகளை தெரிவியுங்கள். அதனை நிறைவேற்றித் தருகிறோம் ,இது எனது அரசல்ல நமது அரசு என கூறினார்.
இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தருமபுரம் ஆதீனம் வாரம்தோறும் வியாழக்கிழமை இருக்கும் மௌன விரதத்தை முதலமைச்சருக்காக இன்று கலைத்து சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments