• Breaking News

    மானையும் விடாத மலைப்பாம்பு..... வைரலாகும் வீடியோ.....

     


    கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் சிஆர்பிஎஃப் (மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம்) செயல்பட்டு வருகிறது. இங்கு சிஆர்பிஎஃப். வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.


    இந்த நிலையில் நேற்று இந்த பயிற்சி மையத்தின் வளாகத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.


    அப்போது அந்த பாம்பு குட்டிமானை விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

    No comments