நாகப்பட்டினம்: பிரபல ஹோட்டலில் பூரி கிழங்கில் கல், வாடிக்கையாளர் அதிர்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்ப்புறங்களில் உள்ள பெரிய மற்றும் சிறிய உணவகங்களில் தரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிரபலமான உணவகத்தில் பூரி மற்றும் கிழங்கு ஆர்டர் செய்திருந்த பார்சலில் கல் உள்ளது தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவகத்திற்கு சென்று கேட்ட பொழுது சாரி என்றுஉரிமையாளர் சொல்லிவிட்டார்.நாகையை சுற்றி உள்ள உணவகங்களில் கவனக்குறைவுடனும் மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் வாடிக்கையாக உள்ளது இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள்மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments