• Breaking News

    அதிமுக,பாமக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்


    நாமக்கல் மேற்கு மாவட்டம், மோகனூர் மேற்கு ஒன்றியம், நன்செய்இடையார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.தி.மு.க.வைச் சார்ந்த எஸ்.சேகர், பா.ம.க. ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் எல்.விக்னேஸ்வரன், பா.ம.க. ஒன்றிய மாண வரணி செயலாளர் எல்.கோபிநாத், பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.கேசவன். ஆகியோர் மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.ஆர்.சண்முகம் தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் பி.சிவா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.பாலாஜி, துணை அமைப்பாளர் சுந்தர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


    ஜெ ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டம், 9942512340

    No comments