எம்.உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோஸ்,டி.டி.எச் நிறுவனம் இணைந்து உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நடத்தினர்


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோஸ்,டி.டி.எச் நிறுவனம் இணைந்து உலக தண்ணீர் தின விழிப்புணர்வு செய்தனர்.எம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் பெலிஸ்டா தலைமை தாங்கினார்.ரோஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஆதப்பன் முன்னிலை வகித்தார். இடைநிலை ஆசிரியை ராஜலெட்சுமி,தொண்டு நிறுவன பணியாளர்கள் அகிலா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

பின்னர் தொடங்கிய உலக தண்ணீர் தின விழிப்புணர்வில் பேசிய சமுதாய ஒருங்கிணைப்பாளர் சாத்தனூர் புவனேஸ்வரி நீரின்றி அமையாது உலகு என்பது அய்யன்  திருவள்ளுவர் வாக்கு என்றும்.பொதுமக்கள் மட்டுமல்ல பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம் என்றும். உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்படும் இந்த விழிப்புணர்வில் தண்ணீரை உயிர்போல் காப்போம் என்று உறுதி ஏற்போம் என்றும் புவனேஸ்வரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மேலும் இதில் பேசிய ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன்  பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், நம் நாட்டின் முக்கிய தொழிலான வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்பைக் கொடுக்கும் தொழிலாக ஆயத்த ஆடை தொழிலே ஆகும் எனவும். படிக்கும் பருவத்திலே வளரிளம் பெண்கள் அதிக அளவில் பஞ்சாலைகளில் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக் களைப்பது,குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல், பெண் குழந்தைகளின் சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 போன்ற விழிப்புணர்வை பள்ளி குழந்தைகளுக்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் விளக்கி கூறினார்.

இரா.பாஸ்கர் செய்தியாளர்

Post a Comment

0 Comments