மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரால் சஸ்பென்ட்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. கல்லூரியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் வரலாற்று துறை இணைப்பேராசிரியர்  ராமர்  மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி ஒருவருக்கு ஆபாச படம் செல்போனில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியர் ராமரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments