• Breaking News

    ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 இன்று உயர்வு


     தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.

    இந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது. இதைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.54,800-க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

    அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    No comments