சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ,பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களின் பயண்பாட்டினை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும், தாம்பரம் மாநகர காவல் ஆனையரகத்தின் புதிய அலுவலகம் திறக்கபட்டதும் தாம்பரம் மாநகராட்சியின் அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஒருங்கினைத்து கண்காணிக்கபடும் என்றார். மேலும் கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் கட்டி முடித்த பிறகு ப்ரத்யேக பகுப்பாய்வு மென்பொறுள் மூலம் அனைத்து சிசிடிவி பதிவுகளும் கண்கானிக்கபடும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment