• Breaking News

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..... அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்த சபாநாயகர்


     தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியதும், அதிமுக உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற அவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    “கடந்த 2001ம் ஆண்டு டிசம்பரில் இதுபோன்ற (கள்ளச்சாராயம்) ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்தது. அப்போது 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்தது. 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தற்போதைய சம்பவம் குறித்து எனது கவனத்துக்கு வந்த உடன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தேன்.

    அப்போதைய நிகழ்வு (2001 டிசம்பர்) குறித்து அவையில் பேசுவார்களோ என பயந்துதான் இவர்கள் (அதிமுக உறுப்பினர்கள்) திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டு, குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.இன்று காலையிலும் மாலையிலும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் வினாக்கள் - விடைகள் நேரம் முடிந்த பின்னர் அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடை கருத்தை பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்பதை தாங்கள் (சபாநாயகர்) பரிசீலித்து ஆவண செய்ய வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அதைத் தொடர்ந்து முதல்வரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் அப்பாவு, வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் மீதான தண்டனையை ரத்து செய்வதாக அறிவித்தார்.

    No comments