நாகை: புகையிலை விற்பனை செய்த கடையை பூட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 5, 2024

நாகை: புகையிலை விற்பனை செய்த கடையை பூட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி

 


நாகப்பட்டினம், காடம்பாடி, பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் இயங்கிவரும் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், வெளிப்பாளையம் காவல் நிலையத்திலிருந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதின் அடிப்படையில்  நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் உத்தரவின்படி, நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன்,  இன்று ( 05.10..24 ) ஆய்வு மேற்கொண்டு அந்த கடையை பூட்டினார்.

மாநில உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுப்படி  ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, 15 நாட்கள் கடை பூட்டப்படும். எனவே வணிக நிறுவனங்கள் நடத்துவோர் தயவுசெய்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கைவிட்டு தொழில் நடத்த வேண்டுகிறோம். 

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார்  / தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். புகார்தாரர் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here