• Breaking News

    அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய விவகாரம்...... இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு

     


    சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜி என்பவரை, கடந்த 13ஆம் தேதி தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இளைஞர் விக்னேஷ் கைது செய்யப்பட்டு, அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது காவல் துறை தரப்பில், மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைக்கு ஆயுதம் எடுத்து வந்து, தாக்குதல் நடத்தியுள்ளார். விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    No comments