குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகங்களை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் , கூத்தம்பூண்டி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் கூத்தம்பூண்டி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகங்களை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாவாயி ராமசாமி ,இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர் அங்கமுத்து ,அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய அவை தலைவர் ஏ ஆர் எஸ். சுப்பிரமணியம் , இளவரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments