• Breaking News

    ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன்.... இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த யூடியூபர் கைது

     


    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ள தெற்கு அண்ணார பாகம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஷால் (வயது 25). யூடியூபரான இவருக்கும், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவர் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

    ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி தனியாக வரவழைத்து ஆபாச புகைப்படம் எடுத்து உள்ளார். பின்னர் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணை முகமது நிஷால் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் களமச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை மிரட்டி முகமது நிஷால் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் யூடியூபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments