முத்துகிருஷ்ணபேரியில் நல்லூர் கல்லூரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்.முகாம்...... வியாபாரிகள் சங்க தலைவர் தொடங்கி வைத்தார்
முத்துகிருஷ்ணபேரியில் நல்லூர் சி.எஸ்.எஸ். ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாமினை மாவட்ட வியாபாரிகள் சங்கத்தலைவர் டி.பி.வி வைகுண்டராஜா தொடங்கி வைத்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் முத்துகிருஷ்ணபேரி கிராமத்தி;ல் 7 நாட்கள் நடைபெறவுள்ளது. முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட தலைவரும், கன்னியாகுமரி மண்டல தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
கல்லூரி தாளாளர் ஜேசுஜெகன், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் நாடார், கல்லூரி முதல்வர் வில்சன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயடேவிசன் இம்மானுவேல், உடற்கல்வி மற்றும் ரத்ததான கழக இயக்குனர் ஜுலியஸ் ராஜாசிங், முதுகலை ஆசிரியர் ஓய்வு பாலசுப்பிரமணியன், முனைவர் நாகராஜன், மக்கள் நல பணியாளர் சுப்பிரமணியன், வியாபார சங்க தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாம் தொடர்ந்து 26ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
No comments