வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வேதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வேதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கம் பெண் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன தலைவர் ஐசரி கணேஷ் ,துணை தலைவர் பிரீத்தி கணேஷ்,புதுமை மற்றும் தொழில் நுட்பத்தில் சிறந்து விழங்கும் இஸ்ரோ விஞ்ஞானி ஷாஜி ஆதித்யா எல்.1,காவல் துறை தலைவர் உறுப்பினர் மற்றும் செயலாளர் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ராஜேஸ்வரி ஐ.பி.எஸ்.,விளையாட்டில் சிறந்து விழங்கியதற்காக உலக கேரம் சாம்பியன் காசிமா,ஊடக துறையில் சிறந்து விளங்குவதற்காக நடிகை மற்றும் தயாரிப்பாளரான குஷ்பு,தொழில் முனையில் சிறந்து விள்ங்குபவர் எவர்க்ரோத் அகடாமியின் நிறுவனர் மாலிகா ரவிகுமார் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரிக்கப்பட்டது.
தொடர்ந்து உலக கேரம் சேம்பியன் காசிமா வேல்ஸ் பல்கலைக்கழத்தில் இலவசமாக படிக்கலாம் என்று கூறிய ஐசரி கணேஷ் ஊக்கதொகையாக பத்து லட்சம் ரூபாய் சாசோலையை வழங்கினார்.பின்பு பேசிய உலக கேரம் சாம்பியன் காசிமா,
தனது தந்தையை ஏராளமானவர்கள் ஏளனமாக பேசி வந்ததாகவும் இதனால் என் தந்தை கூறிய படி நான் உலக காரம் சாம்பியன் வென்றுள்ளதாகவும் இப்பொழுது ஏளனமாக பேசியவர்கள் தனது தந்தைக்கு எழுந்து நின்று வணக்கம் வைப்பதாகவும் நான் பிறந்ததில் இருந்து வாடகை விட்டில் தான் வசித்து வந்தோம் தற்போது புதிதாக வீடு வாங்கி தனது தந்தைக்கு வழங்கியது பெருமையாக இருப்பதாக கண்ணீருடன் தெரிவித்தார் இதை கேட்ட அவரின் தந்தையும் கண்கலங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை மற்றும் தயாரிப்பாளர் குஷ்பு,பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள்,பாலியல் தொல்லைகள் நடக்கும் போது கட்சி ரீதியாக பேச வேண்டாம் என் தம்பியான விஜய் அவர்களுக்கு கூறிகொள்கிறேன்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை அல்லது வன்கொடுமைகள் நடக்கும் போது நம்ம வீட்டின் பெண்ணிற்க்கு நடப்பதாக தான் பார்க்க வேண்டும் இது இவர்கள் ஆட்சியில் நடந்தது அவர்கள் அட்சியில் நடந்தது என்று பார்க்காமல் ஒட்டுமொத்தமாக என்ன செய்ய வேண்டும் வீட்டில் குழந்தைகளை எப்படி வளர்க்க முடியும் என்பதை சொல்லி கொடுக்க வேண்டும் என்பதை தவிர அரசியலாக்க கூடாது என்றார்.
இது போன்ற.ஆடைகள் அணிய கூடாது ,இப்படி பேச கூடாது,அந்த நேரத்தில் போக கூடாது என நாம் பெண்களை கூறி வரும் நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஐந்து வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை எந்த மாதிரியான ஆடை அணிய வேண்ட என்பது தெரியவில்லை.நான் அரசியல் பேச விரும்பவில்லை நான் எதை பேசினாலும் திமுகவிற்க்கு எதிராக வரும் சூழல் உள்ளது.
மாதா பிதா அதற்க்கு பிறகு தெய்வம் என்று கூறுவார்கள் ஆனால் தெய்வமே இன்று பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதால் யாரை நம்புவது என்று தெரியவில்லை ,பள்ளிகளுக்கு தங்களில் குழந்தை அனுப்பி பிறகு பெற்றோர்கள் பயத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments