மீஞ்சூர்: புங்கம்பேட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான வைர கிரீடம் ராமானுஜருக்கு மேள தாளங்கள் முழங்க 108 திவ்ய தேசங்களில் இருந்து சீர் ஊர்வலமாக கொண்டு வந்து சாத்தி வணங்கி வழிபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அமைந்துள்ள புங்கம்பேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு மகா உற்சவ திருமஞ்சனம் நடைபெற்றது. ₹1 கோடி மதிப்பிலான வைர கிரீடம் ராமானுஜருக்கு மேல தாளங்கள் முழங்க 108 திவ்ய தேசங்களில் இருந்து சீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஸ்ரீ சின்ன ஜீயர் உ.வே. சுதர்சனாசார்யர் சாமிகளால் அணிவிக்கப்பட்டது.
பின்னர் பல்வேறு சிறப்பு ஆராதனை நடத்தி வழிபாடு செய்தனர். 108 திவ்ய தேசங்களான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருவள்ளூர் வீரராகவர் கோவில் திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் கோவில் திருப்பதி திருமலா தேவஸ்தானம் உள்ளிட்ட வைணவ திருத்தலங்களில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு வந்ததை புங்கம்பேடு நந்தவனத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவில் பிரகாரம் வழியாக மேளதாளம் சங்கநாதன் முழங்கு எடுத்து வந்து ராமானுஜருக்கு அணிவித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஸ்ரீனிவாசர் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீ யோக நரசிம்மரை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக பல்லக்கு ஊர்வல சேவையை மருத்துவர் ஆன்மீக செம்மல் மீஞ்சூர் விஜய ராவ் கோவில் நிர்வாகத்தினருடன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி 18 வது வார்டு கவுன்சிலர் ராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
No comments