• Breaking News

    ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத தேர்ச்சி


    ஆவுடையானூர்  புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத தேர்ச்சி பெற்றது.

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 349 மாணவ, மாணவிகளில் 347 பேர் தேர்ச்சி பெற்று, 99.4 சதவீத வெற்றி பெற்றனர் . மாணவன் திருமலை முருகன் 495 மார்க் எடுத்து முதலிடமும், மதுமீனா 490 மார்க் எடுத்து 2வது இடமும், காவ்யா 483 மார்க் எடுத்து 3ம் இடமும் பெற்றனர். மேலும் மாணவன் திருமலை முருகன், மாணவி பரமேஸ்வரி ஆகியோர் அறிவியல் மற்றும் சமூக அறிவியலிலும், சரவணன் அறிவியலிலும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். 450க்கு மேல் 28 பேரும், 400க்கு மேல் 110 பேரும் மதிப்பெண் பெற்றனர்.

    இதே போல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில்  மாணவி அபிநயா 564 மார்க் எடுத்து முதலிடமும்,  பிரியதர்ஷினி 557 மார்க் எடுத்து 2வது இடமும், கணேஷ் 555 மார்க் எடுத்து 3வது இடமும் பெற்றனர். மாணவி ஸ்ரீபவிதா கணித அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றார்.

    சுhதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி அருட்திரு மோயீசன் அடிகளார், நிர்வாக அலுவலர் அருள்செல்வராஜ், தலைமை ஆசிரியர் அந்தோணி அருள்பிரதீப், ஆசிரியர்கள் ருகாமா ரோஸ்லின், மாரிச்செல்வி, ஜெயாஸ்டானிஸ், விஜயா, சிவகாமி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    No comments