10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* மாணவிகள் 95.88 சதவீதம், மாணவர்கள் 91.74 சதவீதம் ஆகும்.
* தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 4,917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 1,867 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
* 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
*10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பாட வாரியான தேர்ச்சி விகிதத்தில் அதிகபட்சமாக, ஆங்கிலத்தில் 99.46 சதவீத மாணாக்கர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை முதலிடம்
* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31 சதவீதம் பெற்று சிவகங்கை முதலிடம் வகித்துள்ளது. 2-வது இடம் விருதுநகர் - 97.45 சதவீதம், 3-வது இடம் தூத்துக்குடி - 96.76 சதவீதம், 4-வது இடம் கன்னியாகுமரி - 96.66 சதவீதம், 5-வது இடம் திருச்சி 96.61 சதவீதம் ஆகும்.
No comments