கும்மிடிப்பூண்டி: அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவில் 13 .ஆம் ஆண்டு திருவிழா முன்னிட்டு வைகாசி மாதம் வசந்த் உற்சவ விழாவும் வைகாசி மாதம் 8.ம் நாள் வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மங்கல இசை .5 45 மணிக்கு கணபதி பூஜை எஜமான் சங்கல்பஜம் கோ பூஜை தன பூஜை கணபதி ஹோமம் நவகிரகமும் அஷ்டலட்சுமி ஹோமம் கிராம தேவதை ஹோமம் ஆகியவற்றை நடைபெற்றது.
இது தொடர்ந்து நாகாத்தம்மன் சமேத நாகராஜ் ஆளையத்தில் இருந்து பால்குடம் புறப்பட்டு திருக்கோவில் வந்து அடைந்து அருள்மிகு எல்லயம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை சிவ வழிபாடு அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மனுக்கு புஷ்ப அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் ஆலய நிர்வாகிகள் உபயதாரர்கள் தோக்கமுர் கிராம பொதுமக்கள் குலதெய்வ வழிபாடு குடும்பத்தினர் ஏராளமான பெண்கள் ஆண்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு எல்லையம்மன் வழிபட்டனர். இத்திருக்கோவில் பிரதி மாதம் பௌர்ணமி பூஜை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments