சென்னை அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி IGCSE தேர்வில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அசத்தல்
இயற்பியல் பிரிவில் 92 சதவிகதத்துடன் முதல் இடம் பிடித்து உலகளவில் இளைய சாதனையாளர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் போர்டின் கீழ் இயங்கும் IGCSE பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் உலக அளவில் உள்ள எவரும் வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த விதமான பாடத்திட்டத்தை குறித்தும் தேர்வு எழுதலாம்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உலக அளவில் உள்ள பள்ளிகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று. சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த 11 வயதான தக்ஷினா என்ற மாணவி மேடவாக்கத்தில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா பாத்வே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கல்வி பயிலும் அதே நேரத்தில் பள்ளியில் நடக்கும் "சைல்ட் புரோட்டோஜி ப்ரோக்ராம்" போன்ற பல்வேறு கற்றல் திறன் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.இவரின் கற்றல் ஆற்றலை அறிந்த பள்ளி நிர்வாகம் உலக அளவில் நடைபெறும் இந்த IGCSE தேர்வுக்காக 100 நாட்கள் இவருக்கு சிறப்பு பயிற்சி கொடுத்துள்ளனர்.
பயிற்சியை முடித்த மாணவி தக்ஷினா கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கு கொண்டு பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இயற்பியல் பிரிவில் மூன்று நாட்கள் தேர்வு எழுதினார்.
இதனை அடுத்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் மாணவி தேர்வு பெற்றதுடன் 92 சதவிகிதத்துடன் ஏ ப்ளஸ் பிரிவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதனால் குறைந்த வயதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பத்தாம் வகுப்பு IGCSE தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று முதல் இடம் பிடித்ததுடன் இளைய சாதனையாளர் என்ற உலக சாதனையும் படைத்து அசத்தியுள்ளார் 5ம் வகுப்பு பள்ளி மாணவி.
இது மட்டுமல்லாமல் இவர் பரதநாட்டிய மாணவியாக ஏழு ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வரவேண்டும் என்பதை ஒரு லட்சியமாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மாணவி இந்த உலக சாதனை படைத்தது பெரும் மகிழ்ச்சியையும் பெருமையும் சேர்த்துள்ளதாக கல்வி நிர்வாக சார்பில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சீமா போப்பன ராவ், கல்வித் தலைவர் புஷ்பவல்லி, தமிழ்நாடு சைதன்யா பள்ளிகளின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாபு ஆகியோர் அறிவுத்தலின்படி ஏஜிஎம் ஸ்ரீனிவாசலு, மேடவாக்கத்தில் உள்ள ஃபியூச்சர் பாத்வேஸின் முதல்வர் மீனாட்சி ஆகியோரின் தலைமையில் பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டினார்கள் இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments