• Breaking News

    திருவள்ளூர்: மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் கழக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் 5000.பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வல்லூர் ஊராட்சி பட்டமந்திரி கிராமத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் ராஜா, அத்துப்பட்டு கிளைக் கழக செயலாளர் எம் டி ஜி கதிர்வேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட துணை செயலாளர்கள் உமா மகேஸ்வரி, கதிரவன், எம்எல் ரவி, பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ,குணசேகரன், வெங்கடாஜலபதி ,பேரூர் செயலாளர்கள் ஆரணி  முத்து மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ் உதயன், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு தலைமை தாங்கி நான்காண்டு சாதனை சாதனை குறித்து விளக்கிப் பேசி 5000 பேருக்கு கழக வண்ணன் போட்ட நிழர் குடைகளுடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தலைமை கழக பேச்சாளர்கள் சைதை சாதிக், சூர்யா கிருஷ்ணமூர்த்தி ,நல்லினம் சந்திரசேகர் ஆகியோர் நான்காண்டு சாதனை குறித்து விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ,நிர்வாகிகள் பாஸ்கர் சுந்தரம் ,அன்புவாணன், ஸ்டாலின், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தகுமார், ஆரணி முத்து. ,இளைஞரணி லோகேஷ் பழவேற்காடு முகமது அலவி, ஆசானபூதூர் சம்பத்குமார்,சம்பத் ,வெங்கடேசன், ரவிக்குமார், தனசேகர், ஆறுமுகம், தேசராிதேசப்பன், சுமன் ,கோபி, ஜெயலலிதா சசிதரன் ,மீஞ்சூர் கோதண்டம் ,முன்னாள் நகர செயலாளர்கள் மீஞ்சூர் மோகன்ராஜ் அத்திப்பட்டு எம் டி ஜி வடிவேல். சௌந்தர்ராஜன் ,பொன்னேரி நக்கீரன் உள்ளிட்ட அனைத்து அனைத்து அணிகளின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    No comments