• Breaking News

    இந்திய ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்க முடிவு

     


    ராணுவத்​துக்கு கூடு​தலாக ரூ.50,000 கோடி ஒதுக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்க,பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் பாகிஸ்​தானின் சில பகு​தி​களில் மத்​திய அரசு ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் தாக்​குதல் நடத்தியது.

    இதில் தீவிர​வா​தி​கள் 100 பேர் கொல்​லப்​பட்​ட​தாக​வும், தீவிர​வாத முகாம்​கள் சேதம் அடைந்​த​தாக​வும் ராணுவம் தெரி​வித்​தது.

    இந்​நிலை​யில், ராணுவத்​துக்கு கூடு​தலாக நிதி ஒதுக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.மத்​திய பட்​ஜெட்​டில் பாது​காப்​புத் துறைக்கு நடப்​பாண்டு 2025 - 2026-க்கு ரூ.6.81 லட்​சம் கோடியை நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் ஒதுக்​கி​னார். இது கடந்த 2024 - 2025-ம் ஆண்டு ஒதுக்​கப்​பட்ட தொகையை விட (ரூ.6.22 லட்​சம் கோடி) 9.2 சதவீதம் அதி​கம்.இந்​நிலை​யில், தற்​போது கூடு​தலாக ரூ.50,000 கோடியை ஒதுக்க முடிவு செய்​துள்​ள​தால் பாது​காப்​புத் துறைக்கு ஒதுக்​கப்​படும் பட்​ஜெட் ரூ.7 லட்​சம் கோடியை தாண்​டும். 

    வரும் குளிர்​கால கூட்​டத் தொடரில் துணை பட்​ஜெட் தாக்​கல் செய்து ராணுவத்​துக்கு கூடு​தலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்​கப்பட உள்​ளது.இந்த நிதி பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக்​கும், புதி​தாக ஆயுதங்​கள், வெடிபொருட்​கள், ராணுவத்​துக்கு தேவை​யான உபகரணங்​கள் கொள்​முதல் செய்​வதற்கும் பயன்​படுத்​தப்​படும் என்று மத்​திய பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

    No comments