இந்திய ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்க முடிவு
ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இதில் தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டதாகவும், தீவிரவாத முகாம்கள் சேதம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில், ராணுவத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு நடப்பாண்டு 2025 - 2026-க்கு ரூ.6.81 லட்சம் கோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கினார். இது கடந்த 2024 - 2025-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட (ரூ.6.22 லட்சம் கோடி) 9.2 சதவீதம் அதிகம்.இந்நிலையில், தற்போது கூடுதலாக ரூ.50,000 கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளதால் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் ரூ.7 லட்சம் கோடியை தாண்டும்.
வரும் குளிர்கால கூட்டத் தொடரில் துணை பட்ஜெட் தாக்கல் செய்து ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.இந்த நிதி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், புதிதாக ஆயுதங்கள், வெடிபொருட்கள், ராணுவத்துக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments