• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் 60 மாணவர்கள் யோகாவில் புதிய உலக சாதனை


    கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினா ஸ்ரீ யோகா மைய மாணவர்கள் 60 பேர் சலபாசனத்தில் புதிய உலக சாதனை படைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல யோகா மையமான வினா ஶ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயின்று வரும் 60 மாணவர்கள் ஒரே நேரத்தில் 100 வினாடிகள் கைகளை தரையில் பற்றி, கால்களை மேல் நோக்கி தூக்கி, உடலை  வளைத்து செய்யக்கூடிய மிகவும் கடினமான சலபாசனத்தை செய்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனை நிகழ்வினை நோவா உலக சாதனை மையம் அங்கீகரித்துள்ளது.

    இந்த உலக சாதனை நிகழ்விற்கு ஊன்றுகோலாய் விளங்கிய யோகா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற யோகா மாஸ்டர் காளத்தீஸ்வரன் மற்றும் ஆசிரியைகள் அர்ச்சனா, வித்யா ஆகியோருக்கு சாதனை படைத்த மாணவர்களின் பெற்றோர்களும், பல்வேறு விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சாதனையாளர்களுக்கு வி.ரங்கநாதன், டாக்டர். எஸ். திலகா, டி. கே.மாரிமுத்து, டாக்டர். ஏ. கௌரி தேவி, எல்.சுகுமாரன், வி.எம்.ஸ்ரீனிவாசன், என்.ராஜ்குமார் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

    No comments