• Breaking News

    தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் பலி..... 6 பைக்குகள் சேதம்


    தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது.

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாகுட்டி மகன் முரளி (30). இவர் நேற்று தனது நண்பர்களுடன் குற்றாலத்தில் குளித்து விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். தென்காசி வாய்க்கால் பாலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதில்  ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த தென்காசி வள்ளுவர் தெருவை சேர்ந்த ஜோதிடர் சுடலையாண்டி (72) என்பவர் மீது மோதி அவரை இழுத்து சென்றது, மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள் மீதும் மோதி நின்றது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சுடலையாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்;சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந் விபத்தில் உயிரிழந்த சித்த மருத்துவரான ஜோதிடர் சுடலையாண்டி, தமிழ் சினிமாவிலும் நடித்து உள்ளார்.

    No comments