• Breaking News

    எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 71 குடும்பங்களுக்கு கறவை மாடுகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் வழங்கினார்கள்


    ஈரோடு மாவட்டம் ,  பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வரும் ,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்  71 வது பிறந்த நாளை முன்னிட்டு 71 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு கறவை மாடுகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்  தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.  

    பெருந்துறை ஊத்துக்குளி சென்னிமலை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்களைச் சார்ந்த தலா 10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அவர்களின் சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு கறவை மாடுகள் முதற்கட்டமாக இன்று ஏழு மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும்,  ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட  செயலாளருமான கே.சி.கருப்பணன் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.

     பெருந்துறை கிழக்கு அருள்ஜோதி கே செல்வராஜ், பெருந்துறை மேற்கு விஜயன் (எ) கே. ராமசாமி, பெருந்துறை வடக்கு வைகை தம்பி (எ) ரஞ்சித் ராஜ், ஊத்துக்குளி மேற்கு சி.டி ரவிச்சந்திரன், ஊத்துக்குளி தெற்கு கே. கே.சக்திவேல், ஊத்துக்குளி வடக்கு பி. தனசேகர், சென்னிமலை வடக்கு ராம்ஸ் (எ)ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பெருந்துறை மேற்கு ஒன்றிய கழகம் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சுப்ரீம் ரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது.


     முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார் இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்  மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வேட்டுவபாளையம் அருணாச்சலம் ஆகியோர் முதலில் ரத்ததானம் வழங்கினார்கள். 


    இந்நிகழ்ச்சிக்கு பெருந்துறை கல்யாணசுந்தரம்,கருமாண்டி செல்லிபாளையம் கே.எம் பழனிச்சாமி, காஞ்சிக்கோயில் சிவசுப்பிரமணி பள்ளபாளையம் கமலக்கண்ணன், நல்லாம்பட்டி துரைசாமி, பெத்தம்பாளையம் பூபாலகிருஷ்ணன், ஊத்துக்குளி வி.கே. சின்னச்சாமி,குன்னத்தூர் சரண் பிரபு உள்ளிட்ட பேரூர் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெருந்துறை செல்லாண்டியம்மன்  திருக்கோயிலில் காலை 8:30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி  நலமுடன் வாழ வேண்டி பிரார்த்தனையும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


    மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான கே. எஸ்.பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவர் அணி இணை செயலாளருமான டாக்டர் பொன்னுசாமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் டி டி ஜெகதீஷ், எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் ஏ.கே.சாமிநாதன், மாவட்ட கழக பொருளாளர் கே பி எஸ் மணி, மாவட்ட கழக இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அப்புகுட்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஏ வி எம் நடராஜமூர்த்தி,மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா நல்லசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோ.வி. கருப்புசாமி,மாவட்ட விளையாட்டு அணி தலைவர் ராகவ், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திங்களூர் எஸ் கந்தசாமி, என்.எஸ்.கே. சக்திவேல், இ.எம்.ஆர். மூர்த்தி, துலுக்கம்பாளையம் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டனர். 



    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 ‌

    No comments