நாகை: திருக்குவளையில் நடைபெற்ற மாபெரும் கண் பரிசோதனை முகாமில் இலவச உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சைக்காக 89 பேர் பாண்டிச்சேரி அனுப்பி வைப்பு
ஸ்ரீமதி சுந்தராம்பாள் மருதவாணன் கல்வி அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை,நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு நியூ நைஸ் வித்யாலயா பள்ளி தாளாளரும் பாஜக முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் எம். வீரமணி தலைமை வகித்தார்.
முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினரால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண் விழித்திரை கண்ணீர் அழுத்த நோய் குழந்தைகளின் கண் நோய்கான பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 89 பேர் பாண்டிச்சேரி அழைத்து செல்லப்பட்டனர். போக்குவரத்து செலவு தங்குமிடம் உணவு உட்பட இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இம்முகாமில் வாழக்கரை முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ்.ஆர். கலைச்செழியன், பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் செந்தில், உள்ளாட்சி மேம்பட்டு பிரிவு மாநில செயலாளர் இளவரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துதுரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி
No comments