• Breaking News

    ஜூலை மாதத்திற்குள் ‘லிப்ட்’ வசதி பயன்பாட்டுக்கு வரும்..... மருதமலையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

     


    கோவை, தொண்டாமுத்தூர் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று கலந்து கொண்டார். தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான கூடம், கோசாலை மற்றும் தர்ப்பண மண்டபத்தை திறந்து வைத்தார்.மருதமலைக்கு சொந்தமான இடத்தில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்பதற்கான இடத்தையும் அதை தொடர்ந்து மருதமலை அருகே ஆசியாவிலேயே மிக உயரமான, 184 அடி உயரம் மற்றும் 80-க்கு 60 சுற்றளவு கொண்ட முருகர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

    அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை, மருதமலை முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அங்கு இருந்து கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் நிழல்கூரையுடன் கூடிய கண்ணாடி நடைபாதை அமைத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    ‘லிப்ட்’ அமைக்கும் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூலை மாதத்திற்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பக்தர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மருதமலை சுற்றுப்புற பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் அமைப்புகள் கோயில் பெயரையோ அல்லது கட்சி பெயரையோ கூறி நிதி வசூல் செய்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    No comments