நாகை: திருக்குவளையில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
நாகப்பட்டினம்,:திருக்குவளையில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
திமுக கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் திருக்குவளை கடைவீதியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம ஒன்றிய செயலாளர் சோ.பா.மலர்வண்ணன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் என்.கௌதமன் கலந்துக்கொண்டு திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கான திட்டங்களையும் நான்கு ஆண்டுகள் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.இதில் கீழ்வேளூர் தொகுதி பார்வையாளர் இரா.சங்கர், தலைமை கழக பேச்சாளர் ஆரூர் ஜோதி,பொதுக்குழு உறுப்பினர்கள் இல.பழனியப்பன், கே.சி.குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதாஅருணகிரி,இளம் பேச்சாளர் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன்
No comments