சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 20, 2025

சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார்


திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

 அண்மையில் சட்டமன்ற அறிவிப்பில் பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் கோவில்களில் அன்னதான திட்ட பயனாளிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தொடங்கி வைத்தார். செவ்வாய் கிழமைகளில் அன்னதான திட்ட பயனாளிகள் 500 பக்தர்களில் இருந்து 2000 பக்தர்களாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் 100 பக்தர்களில் இருந்து 500 பக்தர்களாகவும் அதிகரிக்கப்பட்டு அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

 தொடர்ந்து பக்தர்களுடன் அமர்ந்து பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் அன்னதானத்தை பெற்று கொண்டு உணவருந்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை வேலூர் துணை ஆணையர் கருணாநிதி, திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம்,கோவில் செயல் அலுவலர் மாதவன் கோவில் குருக்கள் ஆனந்த ஐயர் அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் சிறுவாபுரி ரமேஷ் ஹரிமுதலியார் சுதாகர். கோவில் ஊழியர்கள்.மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment