சைதாப்பேட்டையில் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மக்களுக்கான மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர்,சமூக ஆர்வலர் கார்த்திக் கண்ணன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தனியார் இன்டர்நெட் மென்டு கம்பெனி அரசை ஏமாற்றி மக்கள் வரி பணத்தை வீணாக்கி குத்தி நாசம் செய்ததை புகார் அளித்த சமூக ஆர்வலர் தி கார்த்திக் கண்ணன் பொதுச்செயலாளர் மக்களுக்கான மக்கள் இயக்கம் என்பவரின் புகாரை பெற்றுக் கொண்ட கோட்டை பொறியாளர் அலுவலகத்தின் SDO முதுநிலை வரைவு அலுவலர், மேலாளர், தபால் பிரிவில் உள்ள ஆவண எழுத்தர் ஆகியோர் புகார் மனுவுக்கான ஒப்புகை ரசீது கொடுக்க மறுத்ததால், அரசாணை எண் 73/2018 மற்றும் உயர் நீதிமன்றத்தின் மகத்தான தீர்ப்பை சுட்டி காட்டியதின் மீது எந்த பயனும் இல்லாததை அடுத்து முதலமைச்சரின் தனி பிரிவு மற்றும் காவல் அவசர உதவி 100க்கு போன் செய்து அங்கு சைதாப்பேட்டை காவலர் வந்த பின்னர் மனுவுக்கான ஒப்புதல் ரசீது மனுதாரருக்கு வழங்கப்பட்டது.
எனவே இது போன்ற அவல நிலைகள் தமிழ்நாட்டின் தலைமை இடமான சென்னையில் நடைபெற்று வருகிறது என்றால் மற்ற மாவட்டங்களில் இது போன்று நடைபெறாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சமூக ஆர்வலர்கள் அனைவரும் குமுறுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இனி எந்த அரசு அலுவலகத்திலும் நடக்காத வண்ணம் அரசு இதற்கு என தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் அதனை மீண்டும் மீறினால் அதற்கான தண்டனையையும் அரசு ஆணையில் குறிப்பிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments