சிபிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் நிலையில் சைதன்யா பள்ளியில் பயின்று இந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா பல்லாவரத்தில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சைதன்யா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பள்ளி நிறுவனர் டாக்டர் பி.எஸ்.ராவ்வின், இயக்குனர்கள் சுஷ்மா போபனா, சீமா போபனா, நாகேந்திரா மற்றும் தமிழ்நாடு செயல்பாட்டு தலைவர் ஹரி பாபு ஆகியோர் மாணவர்களை பூங்கொத்து அளித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது பள்ளியின் ஆசிரியர்கள் கூறியதாவது ஒவ்வொரு பாடத்திட்டத்தின் நுணுக்கத்தை ஆறாம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு கற்பிப்பது மூலம் அவர்கள் 12 ஆம் வகுப்பு வரும்பொழுது தேசிய அளவிலான போட்டித் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எளிதாக கையாளும் முறையில் தயாராகி வெற்றி பெறுகின்றனர் என கூறினர்.
மேலும் இந்நிகழ்வில் தங்களுக்கு உண்டான பள்ளியின் கற்றல், கற்பித்தல் அனுபவத்தினை மாணவர்களும், பெற்றோர்களும் மேடையில் பரிமாறிக் கொண்டனர்.
சைதன்யா பள்ளியில் பயிலும் மாணவர்கள் இந்த முறை 100 சதவீதம் தேர்ச்சி அடைந்திருக்கிறதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments