• Breaking News

    மயிலாடுதுறை: குருஞானசம்பந்தர் பள்ளி மாணவ மாணவிகள் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றனர்


    மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான.குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு(332 மாணவர்களும்) 11ஆம் வகுப்பு(262 மாணவர்களும்) அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சினையும், மாவட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்று  பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.பத்தாம் வகுப்பு.மாணவன் கே கமலேஷ் 500க்கு 494  மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும்,மாவட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

    மாணவி டி அஸ்மினா 500க்கு 488 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்,மாணவன் ஆர் ஜீவா 500க்கு 483 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும்  பெற்றுள்ளனர்.அறிவியல் பாடத்தில். நூற்றுக்கு நூறு ஒரு மாணவரும்,சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு இரண்டு மாணவர்களும்  பெற்றுள்ளனர்.பதினொன்றாம் வகுப்பில் மாணவி பி பவித்ரா 600 க்கு 579  மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும்,மாணவன் எஸ். தனஞ்செய்  600 க்கு 573  மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்,மாணவி டி மதுமிதா  600 க்கு 561 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும்  பெற்றுள்ளார்கள். 

    கணினி அறிவியல் பாடத்தில் ஐந்து மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களையும்,தேர்ச்சி பெற்ற மாணவர்களையும்,அதற்கு உறுதுணையாக இருந்து பயிற்றுவித்த ஆசிரியர்களையும்,பொறுப்பாசிரியர்களையும்,முதல்வரையும் ,பள்ளியின் ஆட்சி மன்ற நிர்வாகக் குழுவினர் , அலுவலகத்தோர்,மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    மேலும்  சிறப்பிடம் பெற்ற மாணவர்களும் , பயிற்சி அளித்த ஆசிரியர்களும்,பள்ளி முதல்வர் ஆர் சரவணன் அவர்களும்,  பள்ளியின் நிர்வாகச்செயலர் வி பாஸ்கரன் ஆகியோர் திருமடத்திற்கு  நேரில் சென்று பள்ளியின் புரவலர்  தருமையாதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த  பரமாசாரிய சுவாமிகளை சந்தித்தனர்.குரு மகா சன்னிதானம் அவர்கள் அனைவரையும் பாராட்டியும், வாழ்த்தியும்  அருளாசி வழங்கினார்.

    No comments