எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி மாபெரும் மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் கழக எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்டம் தச்சர் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்து முகாம் ரத்ததானம் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றுது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன்,என் ஆர் சிவபதி ,பெஞ்சமின், பி வி ரமணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு தொடக்கி வைத்தனர் தொடர்ந்து தையல் இயந்திரம் சலவை பெட்டி உள்ளிட்ட 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர் அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் இன்பராஜ் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டி சி மகேந்திரன் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் ஒன்றிய செயலாளர் கோபால நாயுடு முன்னாள் சேர்மன் சிவகுமார் ஒன்றிய துணை செயலாளர் நாகராஜ் நகர செயலாளர். எஸ் டி டீ.ரவி முல்லைவேந்தன் கோபி இமாச்சலம்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
No comments