பனிரெண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர் அவளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை அறிந்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது மாணவியின் கர்ப்பத்துக்கு அவளுடன் படித்து வரும் சக மாணவன்தான் காரணம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.
No comments